Tuesday, November 19, 2013

பூப்பு நன்னிராட்டு விழா

பூப்பு நன்னிராட்டு விழா
                                                              

           சங்க தமிழர்கள் பூப்பு நீராட்டும் சடங்கினை சிலம்பு கழி நோன்பு எனக் கொண்டிருந்தனர் . திருமணதிற்கு முன்பு பருவப் பெண் அணிந்திருந்த காற்சிலம்பை சுழற்றுவது அக்கால மரபு . இதனை ஒரு பெரும் விழாவாக பெற்றோர் கொண்டாடியுள்ளனர் .. இவ்வாறு சங்க காலம் தொட்டே தமிழர் வழக்கத்தில் இருந்து வரும் இச்சிலம்பு கழி நோன்பு கொங்கு வெள்ளாளர் இனத்தில் திரட்டி சீர் என இன்று வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .
                 காலில் ஆண்கள் கழலும், பெண்கள் சிலம்பு அணிவது அக்கால மரபு . சிறுவர்கள் கூட இடுப்பில் ஐம்படைத்த தாலி கட்டியிருந்தனர் . பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வில், வாள் , கேடயம் , கத்தி ஆகியவற்றை வெள்ளியினாலோ , செம்பினாலோ செய்து அணிவித்தனர் .

          தன் மகள் பூப்பெய்திய(mature ) அதாவது திருமண பருவத்தை அடைந்த செய்தியை அவளை மணக்கும் உரிமையுடைய மாமன்மார்களுக்கு தெரிவித்து மணம் பேச அழைப்பதுதான் இச்சடங்கின் கருத்தாகும்.

குடிசை கட்டல்

                   பெண் பருவமடைந்த செய்தியை பெண்ணின் தாயார் தன் பெற்றோருக்கு தெரிவித்து சகோதரவர்க்கதை குடிசை கட்ட அழைப்பர் . பூப்பெய்திய பின் மங்கையின் பாட்டன், பாட்டி,தாய்மாமன் , அத்தை மற்றும் உறவினர்கள் சீர் கொண்டு வந்து விருந்து வைப்பார்கள் , சகோதர வர்க்கத்தார் தென்னை ஓலைகளால்
குடிசை அமைத்து அதில் பூப்பெய்திய பெண்ணை அமர்த்துவார்கள் .
       அவளுக்கு நாள்தோறும் வண்ணானுடைய  மாற்றுடை கொடுப்பார் . அதற்கு மாற்று என்று பெயர் . இதற்கு அரிசியும் பணமுமாக வண்ணானுக்கு கொடையளிப்பார்கள் .

  மனை வைத்தல்

                      ஒரு கூடையில் மூன்று அல்லது ஐந்து வெள்ளம் அரிசியை நிறைத்து அதன் மேல் தேங்காய் , நெய் இவைகளை வைத்து வாசலில் மாது விரித்து அதன் மேல் இக்கூடையை ருதுவான பெண்ணின் தாய் வழிபாட்டனார் ( அப்பிச்சி ) தம் செலவில் கொண்டு வந்து வைப்பார் . இதற்க்கு தாய் மனை என்று பெயர் . இவை தவிர சேலை ,ரவிக்கை , மயிர்கோதி,குங்குமச்சிமிழ் ,தங்கநகை , கண்ணாடி , சீப்பு , இனிப்புகள் , பழங்கள் பாத்திரங்கள் , ஆகியவைகளையும் கொண்டு வந்து பல தட்டுகளிலும் நிரந்து வாசலில் விரித்துள்ள மாத்தில் வைப்பர் . பிறகு பெண்கள் மேல தாளத்துடன் அத்தட்டுகளை எடுத்துக்  கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று பூசை செய்து வீடு திரும்புவர் . ருதுப்  பெண்ணை அலங்கரித்த பிறகு அவளை மாமன் மகள் அழைத்து வந்து சீர் தட்டங்களுக்கு இடையே போடப்பட்ட இருக்கையில் அமர வைப்பாள் . பின்னர் அருமைகாரி பூசை  செய்த பிறகு பின் ருதுப் பெண்ணிற்கு சந்தனம் பூசி அவள் மடியில் தேங்காய், பழம் , எலுமிச்சை , வெற்றிலை , பாகு , மஞ்சள் வைத்து கட்டி குடிசைக்குள் விடுவார்கள் . இந்த வைபவத்தின் செலவுகள் அனைத்தும் ருதுப் பெண்ணின் தாய் மாமனை சார்ந்ததாகும் .

No comments:

Post a Comment